பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

92



திருக்குறளார் தெளிவுரை * 92 6. 10. மனம்தூயார்க்கு எச்சம்நன்று ஆகும் இனம்தூயார்க்கு இல்லை நன்றுஆகா வினை. 456 மனம் தூய்மையானவர்களுக்கு எஞ்சி நிற்பதாகிய எச்சம் சிறப்பானதாக அமையும். இனம் தூய்மையானவர்களுக்கு நன்றாகாத செயல் எதுவுமே இல்லை. . மனநலம் மன்உயிர்க்கு ஆக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும். 457 நிலைபெற்ற மக்களுயிர்க்கு மனம் நன்றாக இருப்பது செல்வத்தினைத் தரும். இனமானது நன்றாக இருப்பதானது எல்லாப் புகழினையும் கொடுக்கும். . மனநலம் நன்குஉடையர் ஆயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப்பு உடைத்து. 458 மனம் நன்றாக இருப்பதனை நல்லபடியாகத் தாமே தம் பிறவியிலேயே உடையவராக இருந்தாலும், நிறைகுணம் பெற்ற பெரியோர்களுக்கு சேர்ந்த இனம் நன்றாக இருப்பது. காப்பான வலிமை உடையதாகும். . மனநலத்தின் ஆகும் மறுமைமற்று அஃதும் இனநலத்தின் ஏமாப்பு உடைத்து. 459 ஒருவனுக்கு மனம் நன்றாக இருந்தால் மறுமை இன்பம் உண்டாகும். அதற்கு அந்தச் சிறப்புத் தானும் இனம் நன்றாக இருந்தால் பாதுகாப்பான வலிமையினை உடையதாகும். நல்லினத்தின் ஊங்கும் துணைஇல்லை தீயினத்தின் அல்லல் படுப்பது உம் இல், 460 ஒருவனுக்கு நல்ல இனத்தினைவிட மேற்பட்ட துணையும் இல்லை. தீய இனத்தினைவிட மிக்க பகையும் இல்லை.