பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அரசியல்123



பொருட்பால் அரசியல் 123 1 3 62. ஆள்வினை உடைமை (இடைவிடாத மெய்ம்முயற்சி உடையவனாதல்) அருமை யுடைத்துளன்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும். 611 'இத்தொழில் செய்து முடிக்க அருமையானது' என்று எண்ணி மனம் தளராதிருத்தல் வேண்டும். அதனை முடித்தற்கேற்ற பெருமையினைத் தனக்கு முயற்சி உண்டாக்குவதாகும். வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. 612 தொழில் செய்தல் என்னும் குறைபாட்டினைச் செய்யாது விட்டவரை உலகம் விட்டுவிட்டது. ஆதலால் செய்யப்படும் தொழிலில் செயலற்று இருப்பதை நீக்குதல் வேண்டும். . தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு. 613 எல்லோருக்கும் உபகாரம் செய்தல் என்னும் மேம்பாடு, முயற்சி என்று சொல்லப்பட்ட உயர்ந்த குணத்தினிடத்தில் நிலை பெற்றிருப்பதாகும். - . தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும். 614 முயற்சி இல்லாதவன் உபகாரியாக இருக்கும் தன்மையென்பது, படையினைக் கண்டால் அஞ்சுகின்ற பேடி தனது கையில் வாளினை வைத்திருக்கும் தன்மை போல இல்லையாக முடியும், . இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்து ஊன்றும் தூண். - 815 தனக்கு இன்பத்தினை விரும்பாதவனாகித் தொழில் முடிப்பதையே விரும்புகிறவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தினை நீக்கிச் சுற்றத்தாராகிய பாரத்தினைத் தாங்கும் துணாகவும் ஆவான்.