பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அங்க இயல்177



பொருட்பால் அங்க இயல் 179 90. பெரியாரைப் பிழையாமை (ஆற்றல்களினால் பெரியாராயினோரை அவமதித்து நடக்காதிருத்தல்) . ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை. 891 எடுத்ததை முடிக்கும் ஆற்றல் படைத்தவர்களுடைய வல்லமைகளை அவமதியாது நடந்து கொள்ளுதல் என்பது, தமக்குத் தீங்கு வராமல் செய்யும் காவல்கள் எல்லாவற்றிலும் மிக்கதாகும். . பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால் பேரா இடும்பை தரும். 892 ஆற்றல்களினால் பெரியாராயினோரைப் போற்றாமல் அவமதித்து நடப்பானானால், அப்பெரியாரால் அவனுக்கு எக்காலத்திலும் நீங்காத துன்பங்கள் உண்டாகும். . கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின் ஆற்று பவர்கண் இழுக்கு. 893 பிறரை அழிக்க வேண்டியபோது அதனை அப்போதே செய்யவல்ல ஆற்றல் படைத்தவர்களிடத்தில் தான் கெட்டுவிட விரும்பினால் நீதிநூல்களையும் கடந்து குற்றங்களைச் செய்வானாக. கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல். 894 ஆற்றல் மிக்கவர்களுக்கு அவ்வாற்றல் இல்லாதார் தாம் முற்பட்டுத்துன்பத்தினைச் செய்தல், தானே வரக்கூடிய கூற்றுவனை அதற்கு முன்னதாகவே கையால் அழைத்தது போன்றதாகும். யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின் வேந்து செறப்பட் டவர். 895 வலிமை மிகுந்த வேந்தனால் கோபிக்கப்பட்டவர்கள் அவரிடமிருந்து தப்பி எங்கே சென்றாலும் உயிர் வாழமாட்டார்கள்.