பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அங்க இயல்179



பெ ாருட்பால் அங்க இயல் 181 91. பெண் வழிச் சேறல் (மிகுந்த காமத்தால் மனைவிக்கு ஏவல்செய்து 13 அவள்வழி நடத்தல்) . மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார் வேண்டாப் பொருளும் அது. 901 மிகுந்த பெண்ணின்பம்.காரணமாக மனையாளை விரும்பி அவள் தன்மையராக நடப்பவர்கள், தமக்குத் துணையான அறத்தினை அடையமாட்டார்கள். பொருள் சம்பாதிக்க முயல்வோரை அப்பொருளில் செல்லவொட்டாமல் தடுப்பதும் அவ்வின்டமேயாகும். பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர் நானாக நாணுத் தரும். 902 தன்து ஆண்மையினை விட்டு மனையாளது பெண்மையினை விரும்புவான் எய்திநின்ற செல்வம் இவ்வுலகத்து ஆண்பாலர்க் கெல்லாம் நாணுதலைக் கொடுக்கும். . இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் நல்லாருள் நாணுத் தரும். ஒருவர் தனது இல்லாளிடத்தில் தாழ்ந்திருப்பதற்குக் காரணமான அச்சம், அது இல்லாதவராகிய நல்லாரிட்ம் செல்லுங்கால் நாணுதலை எக்காலத்திலும் அவனுக்குக் கொடுக்கும். . மனையாளை அஞ்சும் மறுமையி லாளன் வினையாண்மை வீறுளய்த்ல் இன்று. 904 மனையாளை அஞ்சும் (அஞ்சி நடக்கும்) மறுமைப் பயன் இல்லாதவனுக்குத் தொழிலை ஆளும் தன்மை உண்டானபோதும் நல்லோரால் பாராட்டப்படமாட்டாது. . இல்லாளை அஞ்சுவான் அஞ்சும்மற்று எஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்ல செயல். 905 தனது மனையாளுக்கு அஞ்சி நடப்பவன் தான் தேடிய பொருளேயானாலும் நல்லவர்களுக்கு எப்போதும் நல்லன செய்தற்கு அஞ்சி இருப்பவனாவான்.