பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால்

பாயிர இயல்7



அறத்துப்பால் பாயிர இயல் 7 4. அறன் வலியுறுத்தல் (அறம் இன்னதென்பதும் அதனால் வரும் பயன்களும் பற்றி வற்புறுத்துதல்) 1. சிறப்பு:ஈனும் செல்வமும் எனும் அறத்தினுஉங்கு ஆக்கம் எவனே உயிர்க்கு. 31 பெருஞ்சிறப்பினையும் செல்வத்தினையும் அளிக்கின்ற அறத்தினைவிட மக்கள் உயிர்க்கு மேம்பட்ட செல்வம் வேறு என்ன இருக்கின்றது? 2. அறத்தினுஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்குஇல்லை கேடு, 32 அறம் செய்வதனைவி. மேம்பட்ட செல்வமும் இல்லை; அந்த அறத்தினை அஞ்ஞானத்தால் மறப்பதை விடப் பெரிய தீமையும் இல்லை. 3. ஒல்லும் வகையான் அறவினை ஒவாதே செல்லும்வாய் எல்லாம் செயல். 33 தம்மால் முடியக்கூடிய வழிகளால் இடைவிடாமல் செல்லக்கூடிய இடங்களில் எல்லாம் அறத்தினைச் செய்தல் வேண்டும். 4. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற. 34 மனத்தில் குற்றம் இல்லாமல் இருத்தல் வேண்டும். அறம் என்பது அதுவேயாகும். அறம் அவ்வளவே தான்; அதுவல்லாமல் செய்யப்படுவன யாவும் ஆரவாரம் என்னும் தன்மையுடையனவாகும். > 5. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம், - 35 பொறாமையும், பேராசையும், கோபமும், கடுஞ்சொல்லும் ஆகிய நான்கும் விலக்கப்பட்டு நடைபெறுவதே அறமாகும்.