காமத்துப்பால்
கற்பு இயல்233
காமத்துப்பால்
கற்பு இயல் 233
117. படர்மெலிந்து இரங்கல்
(தலைவன் பிரிவால் தலைவி மெலிதலும் இரங்கலும்)
1.
மறைப்பேன்மன் யான்இஃதோ நோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும். 1 : 61 இந்நோயினைப் பிறர் அறியாமல் இருக்கும்பொருட்டு நான் மறைக்க முயல்கிறேன். ஆனால் இந்த நோய் இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுந்து வருவதுபோல மிகுந்து வருகின்றது.
கரத்துலும் ஆற்றேன்.இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்திலும் நானுத் தரும். 1 + 62 இந்த நோயினை மறைக்க முடியாதவளாகின்றேன்; நோயினை உண்டாக்கினவர்க்கு எடுத்துக்கூறலாமென்றாலோ, நாணமாக இருக்கின்றது. என் செய்வேன்?
. காமமும் நானும் உயிர்காலாத் துங்கும்என்
நோனா உடம்பின் அகத்து. i 163 காமமாகிய நோயும் நாணமும் தம்மைத் தாங்க முடியாத உடம்பின் கண்ணே உயிரைக் காவடித் தண்டாக வைத்து அதன் இரு முனைகளிலும் தொங்குகின்றன.
காமக் கடல்மன்னும் .ண்டே அதுநீந்தும்
ஏமப் புனைமன்னும் இல். i i84 காமமாகிய கடலே என்னிடம் உண்டாகின்றது. அந்தக் கடலினை நீந்திக் கடக்கின்ற பாதுகாப்பாகிய புணைஇல்லாமல்
இருக்கின்றேன்.
துப்பின் எவனாவர் மற்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர், i i85 இன்டத்தினைச் செய்தற்குரிய நட்பின்கண்ணே துன்பத்தினைச் செய்பவர், துன்பம் செய்வதற்கான பகைமையின் கண்ணே என்ன :ெய்வாரோ?