பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமத்துப்பால்

கற்பு இயல்255



காமத்துப்பால் கற்பு இயல் 255 5 128. குறிப்பு அறிவுறுத்தல் (தலைவன் தலைவி, தோழி இவர்கள் ஒருவர் குறிப்பினை ஒருவர்க்கு அறிவுறுத்தல்) கரப்பினும் கைஇதந்து ஒல்லாநின் உண்கண் உரைக்கல் உறுவதொன்று உண்டு. 1271 நீ சொல்லாமல் மறைத்தாயானாலும் அதனைக் கடந்து உன்னுடைய மையுண்ட கண்கள் எமக்குச் சொல்லும் செய்தியொன்று இருக்கின்றது.இனி அதனை நீயே தெளிவாகச் சொல்லுவாயாக. கண்நிறைந்த காரிகைக் காம்புஏர்தோள் பேதைக்குப் பெண்நிறைந்த நீர்மை பெரிது. 1272 என்னுடைய கண்கள் நிறைந்த அழகினையும் மூங்கிலையொத்த தோளினையும் உடைய பேதைக்கு பெண்களுக்கு இயல்பாக இருக்கும் மடமைக்குணம் அளவு கடந்து இருக்கின்றது. . மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை அணியில் திகழ்வதொன்று உண்டு. 1273 கோக்கப்பட்ட பளிங்கு மணிக்குள் கிடந்து வெளியில் புலப்படு கின்ற நூல்போல் இப்பெண்ணின் அழகினுக்குள்ளிருந்து வெளியில் புலப்படுவதொரு குறிப்பு இருக்கின்றது, . முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை நகைமொக்குள் உள்ளது.ஒன்று உண்டு. 1274 மலராத மொட்டுக்குள்ளிருந்து வெளியே புலப்படாத மணத்தினைப் போல இப்பெண் என்னுடன் நகைக்கக்கருதும் முகிழ்ப்பினுள் ஒரு குறிப்பு உண்டு. செறிதொடி செய்துஇறந்த கள்ளம் உறுதுயர் தீர்க்கும் மருந்தொன்று உடைத்து. 1275 நெருங்கிய வளையல்களையுடைய இப்பெண்ணின் மனதிற்கொண்டு எனக்கு மறைத்து வைத்திருக்கின்ற குறிப்பு. எனது மிகுதியான துன்பத்தினைத் தீர்க்கின்ற மருந்தொன்றினையுடையது. -