பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

256



திருக்குறளார் தெளிவுரை 256. 10. பெரிதுஆற்றிப் பெட்பக் கலத்தல் அரிதுஆற்றி அன்பின்மை சூழ்வது உடைத்து, 1278 நம் பிரிவினால் உண்டான துன்பத்தினைப் பொறுத்திருந்து பிறகு மகிழும் வண்ணம் கணவர் திரும்பிவந்து கலக்கின்ற கலவி மேலும் அத்துன்பத்தினைப் பொறுத்திருந்து அவரது அன்பில்லாத் தன்மையினை நினைக்கும் தன்மையுடையது. தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும் முன்னம் உணர்ந்த வளை. 1277 குளிர்ந்த நீர்த்துறையினையுடைய தலைவன் மெய்யாற் கூடியிருந்து மனத்தினால் நம்மைப் பிரிந்தமையினைநம்மைக் காட்டிலும் நம்முடைய வளையல்கள் முன்பாகவே அறிந்து கொண்டன. . நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும் எழுநாளேம் மேனி பசந்து. 1278 எம் காதலர் நேற்றுதான் பிரிந்து போனார். அப்பிரிவினால் யாமும் மேனி பசந்து பல நாட்கள் உடையேம் ஆனோம். தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி அஃது.ஆண்டு அவள்செய் தது. 1279 தன் தோள் வளையல்களை நோக்கி, மெல்லிய தோள்களையும் நோக்கி, தனது அடிகளையும் நோக்கி, அவ்வாறு அப்போது அவள் செய்தாள். அவள் செய்தது அவ்வளவேயாகும். பெண்ணினால் பெண்மை உடைத்துஎன்ப கண்ணினால் காமநோய் சொல்லி இரவு. i280 தமது காம நோயினைக் கண்ணினாற் சொல்லிக் காதலரிடம் இரந்து நிற்கும் தன்மை, இயல்பாகவே பெண் தன்மையுடைய இப்பெண்ணுக்கு மேலும் ஒரு பெண்மையுடையது என்பர்.