பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமத்துப்பால்

கற்பு இயல்265



காமத்துப்பால் கற்பு இயல் 265 133. ஊடல் உவகை (வாடலினை இருவரும் உவந்து பேசுதல்) . இல்லை தவறு.அவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவர்அளிக்கு மாறு. 1323 காதலரிடத்தில் தவறு ஒன்றும் இல்லையென்றாலும் அவர் நம்மீது பேரன்பினை அளிக்கும் தன்மை அவருடன் பிணக்கின்ை உண்டாக்கிக் கொள்ள வல்லமையுடையதாகின்றது. . ஊடலின் தோன்றும் சிறுதுணி நல்லலளி வாடிலும் டாடு பெறும். 1322 ஊடல் காரணமாகத் தம்மிடம் தோன்றுகின்ற சிறிய பினக்கினால் காதலர் செய்யும் நல்லன்பு வாடுமாயினும் அது பெருமையினையே பெறுவதாகும். புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு நீர்இயைந்து அன்னார் அகத்து. 1323 நிலத்துடன் நீர் கலந்ததைப் போன்ற ஒற்றுமையுடைய காதலரிடத்தில் புலந்து கொள்ளுவதைப் போல நமக்கு இன்பம் தருவதொரு புத்தேள் நாடு .ண்டோ? . புல்லி விடாஅப் புலவியுள் தோன்றும்என் உள்ளம் உடைக்கும் படை. 1324 என் உள்ளத்தினைக் கெடுக்கும் படைக்கலம், காதலரைத் தழுவிக் கொண்டு பின்னர் விடாமைக்குக் காரணமான அப்புலவியின்கண் உண்டாவதாகும். - தவறுஇலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்தோள் அகறலின் ஆங்கொன்று உடைத்து. - 1325 ஆடவரிடத்தில் தவறு இல்லையென்றாலும் இருப்பதுபோல ஊடுதல் செய்கின்ற" (தாம் விரும்பிய). மகளிரது மெல்லிய தோள்களைக் கூடப் பெறாதபோது காதலர்க்கு அப்படிப் பட்டதோர் இன்பம் தரும் தன்மையுடையதாம்.