பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

266



திருக்குறளார் தெளிவுரை 266 10. . உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. 1326 உண்ணுகின்றபோது உண்டாகின்ற இன்பத்தினைவிட உண்டது சீரணிக்கின்றதால் உண்டாகும் இன்பம் சிறந்ததாகும். அதுபோல் காமத்திற்குப் புணர்தலைவிட ஊடலின்பம் சிறந்ததாகும். . ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலில் காணப் படும். 1327 காமம் நுகர்வதற்குரிய இருவருள் ஊடலின்கண்ணே தோற்றவர் வென்றவராவார். அது அப்போது அறியப்படாததே யாயினும், பின்னர் புணர்ச்சியின் போது அவரால் அறியப்படும். . ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு. - 1328 இப்பெண்ணின் நுதல் வெயர்க்கும் வகையில் புணர்ச்சியின் கண்ணே உனதாகிய இனிமையை இன்னும் ஒருமுறை இவள் ஊடி யாம் பெறுவோமோ? - . ஊடுக மன்னோ ஒளிஇழை யாம்இரப்பு நீடுக மன்னோ இரா. 1329 ஒளி பொருந்திய அணிகலன்களைக் கொண்ட இப்பெண் எம்முடன் ஊடுதல் செய்வாளாக அவ்வாறு இவள் ஊடிக் கொள்ளவும் யான் வேண்டி நிற்பதற்கும் காலம் பெறும் வகையில் இரவு நீட்டித்தல் வேண்டும். ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்குஇன்பம் கூடி முயங்கப் பெறின். 1330 காம நுகர்ச்சிக்குத் தமக்குள் ஊடல் செய்வது இன்பமாகும்; அந்த ஊடலுக்கு இன்பமானது காதலர் சேர்ந்து தழுவிக் காள்ளுதலாகும்.