பக்கம்:திருக்குறளில் செயல்திறன்.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திருக்குறளில் செயல்திறன்


எண்ணங்களைக் கோடிக் கணக்கில் எண்ணுகிறோம்;
எழுத்துக்களை இலட்சக் கணக்கில் எழுதுகிறோம்;
பேச்சுக்கனை ஆயிரக் கணக்கில் பேசுகிறோம்;
கொள்கைகளை நூற்றுக் கணக்கில் கூறுகிறோம்;
திட்டங்களை பத்துக் கணக்கில் வகுக்கிறோம்;
செயலில் ஒன்றையாவது உருவாகச் செய்வதில்லை.


இதைத் திருவள்ளுவர் நன்றாக உணர்ந்திருக்கிறார் என்று தெரிகிறது. திருவள்ளுவர் தமிழகத்துச் சான்றோர்களில் தலைசிறந்த பேரறிஞர்.

மனிதன் மனிதனாகப் பிறந்தும் பறவையைப்போல வானத்தில் பறக்கக் கற்றுக்கொண்டிருக்கிறான்; மனிதன் மனிதனாகப் பிறந்தும் மீனைப்போலத் தண்ணிரில் நீந்தக் கற்றுக்கொண்டிருக்கிறான்; மனிதன் மனிதனாகப் பிறந்தும் மனிதனைப்போலத் தரையில் நடக்கக் கற்றுக் கொள்ளவில்லையே என்று வருந்தியிருக்கிறார். அதன் விளைவுதான் திருக்குறள்.