பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144


புரட்சிக் கவிஞர் - பாவேந்தர்
பாரதிதாசன்
பாடுகிறார் :

திராவிட நாட்டுவீர் உங்கள் செயற்கெலாம்
அறமே அடிப்படை ஆதல் வேண்டும்
அறம் எனல் வள்ளுவர் அருளிய திருக்குறன்

செல்லும் வழிக்குத் திருக்குறள் விளக்கு!
மனமா சறுக்கும் இனிய மருந்து
கசடறக் கற்க! கற்றிலார் அறிஞர்போல்
கேட்க! கேட்க! திராவிடம் மீட்க

ஓளவையார் அருளிய ஆத்திச் சூடியில்
ஒரு தொடர் தன்னை-ஒன்றுக்கான
உரையை-எப்படி ஒருவர் இலேசாய்
நினைவில் நிறுத்தி இனித்துரைப்பாரோ
அப்படித் திருக்குறள் முனிசாமி அறிஞர்
முப்பால் ஆயிரத்து முன்னூற்று முப்பது
குறளையும் அவற்றிற்குக் கொடுத்த பொருளையும்
நினைவில் நிறுத்தி இனிது விளக்கும் ஓர்
ஆற்றல் உடையவர்: அவர் திருக்குறள் மலர்
வழங்கும் நகைச்சுவை மறச்சுவை பிறசுவை
ஆர்ந்தசொல் அனைத்தும் பெரும்பயன் அளிப்பன

அரிசிமா இட்டலி அளிப்பதாய்ச் சொல்லிப்
பாசிப்பயற்றுமி படைப்பார் அல்லர்;
அறிஞயின் பேச்சும் எழுத்தும் அருங்குறள்
தன்ஆற்றி னின்று செம்பில் மொண் டனிப்பவை

குறட்பயன் கொள்ள நம்திருக்
குறள்முனி சாமிசொல் கொள்வது போதுமே!