160
திருக்குறள்
8.மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்.
ஒரு நல்ல குடும்பத்திலே பிறந்தவனிடம் சோம்பலானது வந்து சேருமானால், அஃது அவனுடைய பகைக்கு அவனை அடிமையாக்கி விடும். 608
9.குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.
தன்னை அடிமையாக்கிக் கொண்டிருக்கும் சோம்பலை ஒருவன் ஒழித்து விடுவானானால், அஃது அவன் குடும்பத்திலும், அக்குடும்பத்தை ஆளும் தன்மையிலும் உள்ள குற்றங்களை எல்லாம் தீர்த்து விடும்.
மடியாண்மை-சோம்பலானது தன்னை அடிமையாக்கிக் கொண்டிருக்கும் தன்மை. 609
10.மடியிலா மன்னவன் எய்தும் அடியளங்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.
தன் பாதத்தினாலே உலகத்தை அளந்த இறைவன் தாவிய நிலப் பரப்பு முழுவதையும் சோம்பல் இல்லாத ஒர் அரசன் ஒருங்கே அடைதல் கூடும்.
எய்துதல்-அடைதல்; அடி அளந்தான்-திருமால்; தா அயது-தாவி அளந்து; ஒருங்கு-ஒரே சமயத்தில். 610
62. ஆள்வினை உடைமை
1.அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.
நாம் இவ்வினையைச் செய்து முடித்தல் மிகவும் அருமையானது என்று எண்ணி, மனத்தளர்ச்சி அடைதல் கூடாது. முயற்சியானது அச்செயலைச் செய்து முடித்தற்கு ஏற்ற பெருமையைத் தரும்.
ஆள்வினை உடைமை-விடா முயற்சி உடைமை; அசாவுதல்- தளர்ச்சி அடைதல்.
எவ்வளவு பெரிய செயலாக இருப்பினும் முயற்சியினால் செய்து முடிக்கலாம் என்பது கருத்து. 611