பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/171

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆள்வினை உடைமை

161



2.வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.

ஒரு வேலையை முற்றும் செய்து முடிக்காமல் அரைகுறையாக விட்டவரை உலகமும் கை விட்டு விடும். ஆதலால், செய்யும் தொழிலில் (அரைகுறையாகச் செய்து) அதைக் கெடுத்து விடுதலைத் தவிர்க.

வினைக்கண்-வேலையில்; வினைகெடல்-தொழிலைக் கெடுத்து விடுதல்; ஒம்பல்-தவிர்க, ஒழிக; வினைக்குறை-அரைகுறையாக வேலை செய்தல்; தீர்த்தார்-கை விட்டவர்; தீர்த்தன்று-விட்டது 612

3.தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு.

பிறருக்கு உதவி செய்தல் என்னும் பெருமிதம் முயற்சி என்னும் உயர்ந்த குணத்திலே நிலைத்திருக்கிறது. 613

4.தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.

முயற்சி சிறிதும் இல்லாதவன் பிறருக்கு உதவி செய்பவனாக இருத்தல், படையைக் கண்டாலே அஞ்சும் பேடி தன் கையில் வாளை எடுத்து ஆளும் தன்மை போல் நிறைவேறாத செயலாகவே முடியும்.

பேடி-பெண் தன்மை மிகுந்து பெண் என்றும் ஆண் என்றும் சொல்ல இயலாத தன்மை உடையவர். 614

5.இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்.

இன்பம் அனுபவித்தலை விரும்பாதவனாகித் தான் மேற்கொண்ட செயலை முடித்தலையே விரும்புகின்றவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தினை நீக்கி, அவர்தம் வாழ்வாகிய மாளிகையைத் தாங்கும் தூண் போன்றவன் ஆவான். 615

6.முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.