பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

திருக்குறள்


இக்குறட்பாவினுக்குக் "கணவரை உபசரிக்கும் மனைவியர் தேவருலகத்தில் தேவர்களால் மிக்க சிறப்புச் செய்யப்படுவர்" என்றும் பொருள் கூறுவர். 58

9.புகழ்புரிந்த இல்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீறு நடை.

புகழை விரும்புகின்ற மனைவியைப் பெறாதவர்கள் தம்மை இகழும் தம் பகைவர் முன்னே சிங்க ஏறு போலப் பெருமிதத்தோடு நடக்க முடியாது.

புரிந்த-விரும்பிய; இல்-மனைவி; ஏறு-ஆண் சிங்கம்; பீடு-பெருமை. 59

10.மங்கலம் என்ப மனைமாட்சி; மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.

ஒரு கணவனுக்கு அவனுடைய மனைவியின் நற்குண நற்செய்கைகளே நன்மை தருவன என்பர். அந்த நற்செய்கைகளுக்கு அழகு செய்யும் அணியாவது நல்ல புதல்வரைப் பெறுதல்.

மங்கலம்-நன்மை; மனை-மனைவி; மாட்சி-பெருமையைத் தரும் நற்குண நற்செயல்கள்; கலம். அணி. 60

7. புதல்வரைப் பெறுதல்


1.பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.

ஒருவன் அடைதற்குரிய செல்வங்களுள் சிறந்தது அறிவிற் சிறந்த குழந்தைகளைப் பெறுதலேயாகும். குழந்தைச் செல்வம் அல்லாத, மண், பொன் முதலிய பிற செல்வங்களைக் குழந்தைச் செல்வத்திலும் சிறந்த செல்வமாக மதிப்பதற்கில்லை.

பேறு-செல்வம்; அறிவு அறிந்த-அறிய வேண்டியவைகளை அறிதற்குரிய; மக்கள்-ஆண், பெண் குழந்தைகள். 61

2.எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.

.