பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

திருக்குறள்


என்றும் இறவாமலிருக்கச் செய்யும் தேவாமிர்தமாக இருந்தாலும் விரும்பத்தக்கது அன்று. 82

3.வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.

தன்னை நாடி வருகின்ற விருந்தினர்களை நாள் தோறும் வரவேற்று, அவர்கட்கு வேண்டுவன அளித்து, அவர்களைப் போற்றி வரும் இயல்புடையவனின் இல்வாழ்க்கை எந்தக் காலத்திலும் வறுமையால் வருந்திக் கெடுவதில்லை. 83

4.அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந் தோம்புவான் இல்.

நல்ல விருந்தினர்களை முகமலர்ச்சியோடு உபசரிக்கும் இயல்புடையவனின் இல்லத்தில் திருமகள் உள்ளம் மகிழ்ந்து தங்கியிருப்பாள்.

அகன் அமர்ந்து-மனத்தில் மகிழ்ச்சி பொருந்தி. 84

5.வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.

விருந்தினரை உண்ணும்படி செய்து உபசரித்து அவர் உண்டு மிகுந்ததைத் தானும் தன் குடும்பத்தாரும் உண்ணும் இயல்புடையவன் நிலத்துக்கு விதை விதைத்தலும் வேண்டுமோ? (வேண்டுவதில்லை; தானே விளையும்.) 85

6.செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.

தன்னிடத்து வந்து செல்லும் விருந்தினர்களை உபசரித்து அவர்களை வழி கூட்டி அனுப்பி விட்டு, மேலும் வரக் கூடிய விருந்தினருக்காக எதிர்பார்க்கும் இயல்புடையவனை மேலுலகத்திலுள்ள இந்திரன் முதலிய தேவர்கள் ஒரு விருந்தினனாகப் பாவித்து அவனுக்கு மதிப்புத் தந்து அவனைப் போற்றிப் புகழ்வார்கள். 86

7.இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.