பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

திருக்குறள்


4.தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்.

இவர் நடுவு நிலைமை உடையவர், இவர் நடுவு நிலைமை இல்லாதவர் என்பதனை அவரவருக்குப் பின் எஞ்சி நிற்கக் கூடிய புகழைக் கொண்டும், பழியைக் கொண்டும் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.

தக்கார்-நடுவு நிலைமை உடையவர்; தகவிலர்-நடுவு நிலைமையில்லாதவர்; எச்சம்-மிகுந்து நிற்பது; இங்கே புகழ்ச்சி, இகழ்ச்சிகளைக் குறிக்கும்.'எச்சத்தாற் காணப்படும்'என்பதற்கு நன்மக்கள் உண்மையானும், இன்மையானும் அறியப்படும் என்று பொருள் கூறுவர். 114

5.கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி.

தாழ்வும், உயர்வும் ஒருவரது வாழ்வில் இல்லாதவை அல்ல; அவரவர் செய்த தீவினை, நல்வினைகளின் பயனாக அவை வந்தே தீரும். .ஆதலால், தாழ்வு வந்த போதும், வாழ்வு வந்த போதும் நடுவு நிலைமையிலிருந்து தவறாமல் இருத்தலே அறிவு ஒழுக்கங்கள் அமைந்த சான்றோர்கட்கு அழகாகும்.

கேடு-கெடுதி,தாழ்வு; பெருக்கம்-செல்வம், நல்ல, நிலை; கோடாமை- தவறாமை; அணி-அழகு, ஆபரணம். 115

6.கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுஒரீஇ அல்ல செயின்.

தன் மனம் நடுவு நிலைமையிலிருந்து நீங்கி, நடுவு நிலைமையல்லாத செயலைச் செய்ய நினைத்தாலும் "இதனால் நான் அழிந்து போவேன்" என்று ஒருவன் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.

கெடுவல்-அழிந்து போவேன்; நடுஒரீஇ-நடுவு நிலைமையிலிருந்து தவறி. 116

7.கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.