பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/94

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

திருக்குறள்


7.தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.

தன்னுயிர் போவதாயினும் ஒருவன் வேறொன்றன் இனிய உயிரைப் போக்கும் செயலைச் செய்தல் கூடாது. 327

8.நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை.

கொலைத் தொழிலைச் செய்வதால் உண்டாகும் செல்வம் மிகவும் பெரியதாக இருந்தாலும்,, அதனால் நன்மை விளைவதாய் இருந்தாலும், அக்கொலைத் தொழிலால் பெறப்படும் செல்வம், நற்குணங்கள் பலவும் அமைந்த சான்றோர்க்கு இழிவுடையதே ஆகும்.3 328

9.கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.

கொலைத் தொழிலை உடையவராகிய மனிதர்கள், அத்தொழிலின் இழிவை உணர்ந்த நல்லோர் உள்ளத்தில் புலைத் தொழிலினராகத் தோன்றுவர்.

மாக்கள்.மனிதர்கள்; புலைவினையர். புலைத் தொழிலினர்; புன்மை-இழிவான தன்மை. 329

10.உயிருடம்பின் நீக்கியார் என்ப செயிருடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

நோயோடு கூடிய உடம்புடன், நீங்காத தீய வாழ்க்கையை உடையவர்கள், முற்பிறப்பில் கொலை பல செய்து உயிர்களை உடம்பிலிருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.

செயிர்-குற்றம், இங்கே நோயினைக் குறிக்கும்; செல்லா-நீங்காத; தீ வாழ்க்கை-கொடிய வாழ்க்கை. 330

34. நிலையாமை


1.நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.