494
திருக்குறள்
எனக்கின்ப முண்டாகா நின்றது என்றவாறு. ௪
1215. நனவினாற்[1] கண்டதூஉ மாங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே யினிது
என்பது இதுவுமது.
முன்பு நினைவினாலே[2] காதலரைக் கண்டு கூடியனுபவித்த இன்பமும், அப்பொழுதே இனிதாயிற்று; இன்று கனவிலே கண்ட இன்பமும் கண்ட பொழுதே இனிதாயிற்று; ஆனபடியினாலே, எனக்கு இரண்டு வகையும் ஒத்துச் சரியாயிருந்தன என்றவாறு ௫
1216. நனவென ஒன்றில்லை யாயிற் கனவினாற்
காதலர் நீங்கலர் மன்
என்பது இதுவுமது
நனவென்று சொல்லப்படுகின்ற ஒருபாவி இல்லாவிட்டால், கனவிலே வந்து கூடிய காதலர் என்னைவிட்டுப் பிரியார் என்றவாறு. ௬
1217. நனவினா னல்காக் கொடியார் கனவினா
னென்னெம்மைப் பீழிப் பது
என்பது*
ஒரு நாளும் நனவிலே வந்து கூடாத பொல்லாதவர் தினந்தினமும் கனவிலே வந்து நம்மை வருத்துகிறது என்ன வியைபு பற்றி என்றவாறு. ௭
1218. துஞ்சுங்காற் றோண்மேல ராகி விழிக்குங்கால்
நெஞ்சத்த ராவர் விரைந்து
என்பது
என் நெஞ்சை விடாமல் இருக்கிற காதலர் நான் துாங்குகிற பொழுது வந்து என்தோள் மேலராய்ப் பிறகு விழிக்கிறபோது திரும்பி என் நெஞ்சிலே இருப்பர் என்றவாறு.
*இங்கும் அடுத்த மூன்று பாடல்களுக்கும் பரிமேலழகர் தந்த துறைக் குறிப்பு இல்லை.