508
திருக்குறள்
நிணத்தை நெருப்பிலே போட்டால் அது உருகுகிறதுபோலத் தம் காதலரைக் கண்டவுடனே நிறை அழிந்து உருகும் நெஞ்சினையுடைய ஸ்திரீகளுக்கு, நம் நாயகனுடனே பிணங்கி இருப்போ மென்கிறது உண்டாமோ? ஆகாது என்றவாறு.
யான் அத்தன்மையே னாகலின் எனக்கு அஃது இல்லை என்பதாம். ௰
ஆக அதிகாரம் ளஉயசாக்குக்குறள் சநஉளசாய
இப்பால் 127. அவர்வயின் விதும்பல்
என்பது, தலைமகனும் தலைமகளும் பிரிந்தபோத ஒரு வரையொருவர் காணவேண்டி ஆசையினாலே விசனப்படுகிறதைச்[1] சொல்லுகிறதாம்.
1261. வாளற்றுப் புற்கென்ற கண்ணு மவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்
என்பது, தலைமகள் தலைமகனைக் காணவேண்டி விசாரத் தினால்[2] சொல்லியது:
அவர் நம்மைப் பிரிந்து போன நாள்களைச் சுவரிலே கிழித்து வைத்து, அவற்றைத் தொட்டு எண்ணி எண்ணி விரல்கள் தேய்ந்து போயின; அதுவு மல்லாமல் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்துக் கண்களும் பிரகாசம் மறைந்து போயின; இப்படியாகியும் அவர் வரவில்லை யென்றவாறு. க