பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii முள். இந்த நிலையில் அங்கமாகத் தனது நாயகன் நினைவு வந்துவிடவே அழுதுக் கொண்டிருக்கின்ருள். அவன் வருகைக்கு ஏங்கிக் தணியாத துயரம் கொண்டவளானாள், அவள் நாள்தோறும் கனவு காணுகின்றாள். நினைப்பில் வலிமை புலனுகின்றது. தலைவனைக் கனவில் காணுகின்ற வாய்ப்பு அவளுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்கின்றது. மாலைப்பொழுது வரும்போதெல்லாம் மிகப் பெரிய வேதனை அவளைத் தாக்குகின்றது. நாளுக்கு நாள் உறுப்புக்களெல்லாம் அழகிழந்துவிடு கின்றன. அவரிடம் துாது அனுப்பலாமா என்றும் எண்ணு கின்ருள். தன்னுடைய நெஞ்சத்தோடு தானே போராட் டம் நடத்துகின்ருள். காமவேகம் அளவு கடந்து, உணர்ச் சியை மறைத்து வைக்க முடியாமல் தன்னை மீறி வெளிப் பட்டு விடுகின்றதே என்று தலைவி கூறுகின்ருள். இப்படியிருக்க, பணி மேல் சென்ற தலைவன் அங்கே வேலை முடியும் தருவாயில், தவியைக் காணும் வேட்கை மிகுந்தவன் ஆளுன். அவளேக் கண்டு இன்பம் துய்க்கத் துடிக்கின்ருன். அவன் வேலையும் முடிந்தது. புறப்பட்டு விட்டான். வீடு வந்து சேர்ந்தான். பிரிந்தவர் கூடினர். இன்ப நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன. பிரிந்திருந்து வந்தவன் தன் இன்ப நுகர்ச்சிகளை நிறைவேற்றுகிருன். நாயகி மீண்டும் கவலைக் குறிப்பினைக் காட்டுகின்ருள், ஏன்? மறுபடியும் நாயகன் பிரிவானே’ என்பதே காரண மாகும். நாயகன் அவள் எண்ணத்தைப் புரிந்துகொண் டான். பிரியவில்லை என்று உணர்த்தினன். அவள் மிகவும் மகிழ்ச்சி கொண்டாள். நாயகன் நாயகியிடையே நடைபெறுகின்ற புலவி நிகழ் கின்றது. அது ஊடல் என்று கூறப்படும். ஊடலில் நாயகி யின் அரிய நுட்பமான புத்திசாலித்தனம் எடுத்துக் காட்டப் படுகின்றது. புலவி, புலவி நணுக்கம், ஊடலுவகை என்ற அதிகாரங்களோடு இரண்டாவது இயலான கற்பியல் முற்றுப்பெற்று காமத்துப்பால் முடிவடைகின்றது.