பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரட்சிக் கவிஞர்-பாவேந்தர் II T J jí j; T 3 $jI 11 டு கிருர் திராவிட நாட்டுளிர் உங்கள் செயற்கெலாம் அறமே அடிப்படை ஆதல் வேண்டும் அறம் எனல் வள்ளுவர் அருளிய திருக்குறள் செல்லும் வழிக்குத் திருக்குறள் விளக்கு: மனமா சறுக்கும் இனிய மருந்து கசடறக் கற்க கற்றிலார் அறிஞர் பால் கேட்க! கேட்க: திராவிடம் மீட்க ஒளவையார் அருளிய ஆத்திச் சூடியில் ஒரு தொடர் தன்னை - ஒன்றுக்கான உரையை - எப்படி ஒருவர் இலேசாய் நினைவில் நிறுத்தி இனிதுரைப்பாரோ அப்படித் திருக்குறள் முனிசாமி அறிஞர் முப்பால் ஆயிரத்து முன்னுாற்று முப்பது குறளேயும் அவற்றிற்குக் கொடுத்த பொருளையும் நினைவில் நிறுத்தி இனிது விளக்கும் ஒர் ஆற்றல் உடையவர்: அவர் திருக்குறள் மலர் வழங்கும் நகைச்சுவை மறச்சுவை பிறகவை ஆர்ந்தசொல் அனைத்தும் பெரும்பயன் அளிப்பவை அரிசிமா இட்டலி அளிப்பதாய்ச் சொல்லிப் பாசிப்பயற்றுமி படைப்பார் அல்லர்: அறிகுசின் பேச்சும் எழுத்தும் அருங்குறள் தேன் ஆற்றி னின்று செம்பில்மொண் டளிப்பவை குறட்பயன் கொள்ள நம்திருக் குறள் முனி சாமிசொல் கொள்வது போதுமே!