பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் வி. முனிசாமி D, 4, டர்ன் புல்ஸ் சாலை, நந்தனம், சென்னை-600 035. திருக்குறளுக்குத் தொண்டு.... வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ என்பது மகாகவி பாரதியாரின் வாக்கு. இளமையில் இந்தப் பாடலைப் படித்த எனக்கு உறுதியான எண்ணம் உள்ளத்தில் பிறந்தது. 1935ஆம் ஆண்டில் பேசும் ஆற்றலின வளர்த்துக் கொள்ளும் பணியைத் தொடங்கினேன். அந்தப் பருவத்தி லேயே ஆயிரத்து முன்னுாற்று முப்பது குறட்பாக்களையும் மனனஞ்செய்து நல்லாசிரியரிடம் உரை நயம் கற்றுத் தெளிந்தேன். பொதுமக்களிடையே அவர்களுக்குப் புரியும் வகையில் எளிமையாக நகைச்சுவையுடன் குறட்பாக்களை விளக்கிக் கூறும் பணியினைத் தொடர்ந்து செய்துவந்தேன். அந்தக் காலத்தில் பொதுமக்களிடையே அவர்களுக்கு ஏற்றவாறு குறட்பாக்களைச் சொல்லுகின்ற பணியினை யாரும் செய்ய முயற்சிக்கவில்லை என்று கூறுவது மிகையாகாது. திருக்குறள் சொற்பொழிவுகளைத் தொடங்கி பத் தாண்டுகள் கழித்து சிறுசிறு நூல்களாக எழுதி வெளியிட் டேன். எண்ணிக்கையில் இருபதுக்கு மேற்பட்ட நூல்கள்