பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V திருக்குறள் அச்சகம் அமைத்து சிறுசிறு நூல்கள் பற்பல வெளியிட்டு வந்தேன். 'குறள் மலர்' என்ற வார இதழும், அந்தக் காலத்தில் வெளியிடப்பட்ட சிறுசிறு நூல்களும், அடியேன் தொடர்ந்து செய்துவந்த திருக்குறள் சொற்பொழிவுகளுமே இன்றைய தினம் மக்களிடையே திருக்குறள் மணம் கமழ்வதற்கு முதற் காரணமாக விருந்தவைகளாகும் என்று அடக்கமாகச் சொல்லிக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். சற்றேறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு முன்பதாக வெளியிடப்பட்ட நூல்கள் அனைத்தையும் இப்பொழுது தொகுத்து பல நூல்களாக வெளியிடுகின்றேன். தமிழர்கள் நல்லாதரவினை நல்கி உலகப் பொதுமறைத் தொண்டினை ஊக்குவிக்குமாறு வேண்டுகிறேன். என்னுடைய அருமை நண்பரும், அகஸ்தியர் அச்சகத் தின் உரிமையாளரும், இந்த நூவினைச் சிறப்பாக அமையச் செய்தவரும், இந்த நூலுக்கு வாழ்த்துரையான சிறப்புரை தந்தவருமான தமிழ்ப்பேரறிஞர் சங்க இலக்கியச் செம்மல் உயர்திரு. க. சண்முகசுந்தரனர் அவர்களுக்கு உளமார்ந்த நன்றியினையும் வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பன் நூலாசிரியன்