இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
111 52. தெரிந்து வினையாடல்
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும். 5||
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை. 512
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு. 513
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர். $14
அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறந்தானென்று ஏவற்பாற் றன்று. 515
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல். $16
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் 517
வினைக்குரிமை நாடிய பின்றை அவனை அதற்குரிய னாகச் செயல். $18
வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறாக நினைப்பானை நீங்கும் திரு. 519
நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு. 520