பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111 52. தெரிந்து வினையாடல்

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும். 5||

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை. 512

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு. 513

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர். $14

அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறந்தானென்று ஏவற்பாற் றன்று. 515

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு

எய்த உணர்ந்து செயல். $16

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் 517

வினைக்குரிமை நாடிய பின்றை அவனை அதற்குரிய னாகச் செயல். $18

வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறாக நினைப்பானை நீங்கும் திரு. 519

நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்

கோடாமை கோடா துலகு. 520