பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் அங்கவியல் - 142

ஒரு செயலைப்பற்றிய ஆராய்ச்சியின் முடிவு, மனத்தில் துணிவு பெறுவதே ஆகும் அவ்வாறு துணிவு கொண்டபின், அதனைச் செய்யாமல் காலம் கடத்துதல் தீமையாகும். 671 காலம் கடந்து செய்வதற்கு உரிய செயல்களைக் காலம் தாழ்த்தியே செய்யவேண்டும்; கடத்தாமல் செய்வதற்குரிய செயல்களை விரைந்து செய்ய வேண்டும். 672

செய்யக்கூடிய இடங்களில் எல்லாம் செயலைச் செய்வது நன்மையே செய்ய இயலாதபோது, அதை முடிப்பதற்கேற்ற வழிகளை ஆராய்ந்தபின்பே செய்தல் வேண்டும். 673 செய்யும் செயலையும், ஒழிக்கும் பகையையும், குறைவிடாமல் செய்துவிடவேண்டும்; அவற்றின் மிச்சம் தீயின் ஒழிவைப் போலப் பெருகிப் பெருங்கேடு உண்டாக்கிவிடும். 674 வேண்டிய பொருள், கருவிகள், தக்க காலம், செயலறிவு, உரிய இடம் என்னும் ஐந்தையும் மயக்கமில்லாமல் ஆராய்ந்து கொண்ட பின்னரே, செய்தல் வேண்டும். 675 செயலின் முடிவைப்பற்றியும், இடையில்வரும் இடையூறுகளைப் பற்றியும், முடித்தபின் அடையும் பெரும்பயனையும் ஆராய்ந்தே, ஒரு செயலைச் செய்தல் வேண்டும். 676 ஒரு செயலைச் செய்வதற்குரிய செயல்முறையாவது, அதனை முன்பே செய்துமுடித்துத் தெளிந்தவனிடம் கேட்டறிந்து, அவைகளைத் தாமும் மேற்கொள்ளுதல் ஆகும். 677

மதநீரால் கன்னம் நனையும் யானையைக் கொண்டு, வேறான யானையைக் கட்டுவதைப்போல, பழகிய செயலின் அறிவைக் கொண்டே பிற செயல்களையும் செய்தல் வேண்டும். 678 மாறுபட்டவரையும் தம்முடன் பொருந்துமாறு செய்து செயலிலே ஈடுபடுதல், நண்பருக்கு நல்லவை செய்வதிலும் மிகவும் விரைவாகச் செய்வதற்கு உரியதாகும். 679 ஒன்றைச் செய்யும் வல்லமை இல்லாதவருள், பயந்து இடையில் குறைப்பட்டவர்கள், பெரியோரைப் பணிந்து கேட்டு, அவர் கூறியபடி நடந்துகொள்ள வேண்டும். 68()