பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169 81. பழைமை

பழைமை எனப்படுவது யாதெனில் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. 801

நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு உப்பாதல் சான்றோர் கடன். 802

பழகிய நட்புஎவன் செய்யும் கெழுதகைமை செய்தாங்கு அமையாக் கடை 803

விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையாற் கேளாது நட்டார் செயின், 804

பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க நோதக்க நட்டார் செயின், 805

எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் தொல்லைக்கண் நின்றார் தொடர்பு. 806

அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின் வழிவந்த கேண்மை யவர். 807

கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாளிழுக்கம் நட்டார் செயின், 808

கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு. 809

விழையார் விழையப் படுப பழையார்கண் பண்பின் தலைப்பிரியா தார். 870

7. திரு-எண்6