இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
177 85. புல்லறிவாண்மை
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையாது உலகு. 84]
அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும் இல்லை பெறுவான் தவம் 842
அறிவிலார் தாம்தம்மைப் பிழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது. 843
வெண்மை எனப்படுவது யாதெனில் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு 844
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடற வல்லது உம் ஐயம் தரும். 845
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி. 846
அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு. 847
ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவுமோர் நோய், 848
காணாதாற் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு. 849
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும். 850