இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
213 103. குடிசெயல்வகை
கருமம் செயவொருவன் கைதுவேன் என்னும் பெருமையிற் பீடுடைய தில். 102?
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇர ண்டின் நீள்வினையால் நீளும் குடி, 1022
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும். 1023
சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத் தாழாது உஞற்று பவர்க்கு. 1024
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு. 1025
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல் 1026
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை 102.7
குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும். 1028
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு. 1029
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தான்றும் தல்லாள் இலாத குடி, ó 1030