இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
215 104. உழவு
சுழன்றும்எர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை 103?
உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து. f{}32
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். 1033
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர். 1034
இரவார் இரப்பார்க்கொன் lவர் கரவாது கைசெய்துண் மாலை யவர். #035
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவது உம் விட்டே மென் பார்க்கும் நிலை. 1036
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும். 1037
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு. 1038
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும். ft).39
இலமென் றசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும். 1040