பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

217 105. நல்குரவு

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது. 1041

இன்மை எனஒரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும். 范}42

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக நல்குரவு என்னும் நசை, }{}.43

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு தரும். ls)44

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று படும். 1045

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நன்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும். 花}#6

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும். . 104.7

இன்றும் வருவது கொல்லோ நெருதலும் கொன்றது போலும் நிரப்பு. 1048

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது. 1049

துப்புரவு இல்லார் துவரத் துறவாமை உப்பிற்கும் காடிக்கும் கூற்று. 105()