இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
243 117. படர்மெலிந்து இரங்கல்
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும். 116}
கரத்தலும் ஆற்றேன்.இந் நோயைநோய் செய்தார்க்கு உரைத்தலும் நானுத் தரும். lló2
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என் நோனா உடம்பின் அகத்து. 1163
காமக் கடன்மன்னும் உண்டே அதுநீந்தும் ஏமப் புணைமன்னும் இல், 1164 துப்பின் எவனாவர் மற்கொல் துயர்வரவு நட்பினுள் ஆற்று பவர். 1765
இன்பம் கடன்மற்றுக் காமம் அஃதடுங்கால் துன்பம் அதனிற் பெரிது. 1766
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே உளேன். 1767
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா என்னல்லது இல்லை துணை. 1768
கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள் நெடிய கழியும் இரா. 1169
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோஎன் கண். 1170