இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
255 123. பொழுதுகண்டு இரங்கல்
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது, 1221
புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல் வன்கண்ண தோநின் துணை. 1222
பனியரும்பிப் பைதல்கொள் மாலை துணியரும்பித் துன்பம் வளர வரும். 1223
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும். |224
காலைக்குச் செய்ததன் றென்கொல் எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை. 1225
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்தது இலேன். 1226
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலருமிந் நோய். 1227
அழல்போலும் மாலைக்குத் துதாகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை 1228
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு மாலை படர்தரும் போழ்து. 1229
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை மாயும்என் மாயா உயிர். 1230