இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
259 17. நெஞ்சொடு கிளத்தல்
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத் எவ்வநோய் தீர்க்கும் மருந்து. (தொன்றும் 1241
காதல் அவரில ராகநீ நோவது பேதைமை வாழிஎன் நெஞ்சு. 1242
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல் பைதல்நோய் செய்தார்கண் இல், 1243
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் தின்னும் அவர்க்கான லுற்று. 1244
செற்றா ரெனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம் உற்றால் உறாஅ தவர். 1245
கலந்துணர்த்துங் காதலர்க் கண்டாற் புலந்துணராய் பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு 1246
காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே யானோ பொறேனிவ் விரண்டு. 1247
பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர் பின்செல்வாய் பேதையென் நெஞ்சு, #248
உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ யாருழைச் சேறியென் நெஞ்சு, 1249
துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா இன்னும் இழத்தும் கவின் 1250