இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
269 130, நெஞ்சொடு புலத்தல்
அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீயெமக்கு ஆகாதது.
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச் செறாஅர்எனச் சேறிஎன் நெஞ்சு.
கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ பெட்டாங்கு அவர்பின் செலல்.
இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே துணிசெய்து துவ்வாய்காண் மற்று.
பெறாஅமை அஞ்சும் பெறிற்பிரிவு அஞ்சும் அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் தினிய இருந்ததென் நெஞ்சு,
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாளன் மாணா மடநெஞ்சிற் பட்டு,
எள்ளின் இளிவாம் என்றெண்ணி அவர்திறம் உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.
துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய நெஞ்சம் துணையல் வழி.
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய நெஞ்சம் தமரல் வழி.
1291
1292
1293
1294
1295
1296
1297
1298
1299
1300