இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
271
131. புலவி
புல்லா திராஅப் புலத்தை அவருறும் அல்லல்நோய் காண்கஞ் சிறிது. 1301
உப்பமைந் தற்றாற் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல், 1302
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல், #303
ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று. 1304
நலத்தகை நல்லவர்க் கேனர் புலத்தகை பூவன்ன கண்ணா ரகத்து.
130S
துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று. j306
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவதன்றுகொல் என்று. 1307
நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும் காதலர் இல்லா வழி 1308
நீரும் நிழலது இனிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது. 1309
ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம் கூடுவேம் என்பது அவா. 1310