இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
273 132. புலவி நுணுக்கம்
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுவுண்பர் நண்ணேன் பரத்ததின் மார்பு. 13||
ஊடி யிருந்தேமாத் தும்மினார் யாந்தம்மை நீடுவாழ் கென்பாக்கு அறிந்து. 1312
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினர் என்று. 1313
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று. 1314
இம்மைப் பிறப்பிற் பிரியலம் என்றேனாக் கண்ணிறை நீர்கொண் டனள். 1315
உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள், 1376
வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினிர் என்று. 1317
தும்முச் செறுப்ப அழுதாள் துமருள்ளல் எம்மை மறைத்திரோ என்று. 1318
தன்னை யுணர்த்தினும் காயும் பிறர்க்குநீர் இந்நீரர் ஆகுதிர் என்று. 1319
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் யாருள்ளி நோக்கினiர் என்று. 1320