பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் - இல்லற இயல் 28

ஒவ்வொரு பகுதிதோறும் முறையோடு பொருந்தி நடை பெறுமானால், தகுதி என்று கூறப்படும் நடுவுநிலைமையும் நல்லதே ஆகும். 孺 செம்மை உடையவனின் பொருள் வளமையானது இடையிலே அழிந்து போகாமல், அவன் வழியினர்க்கும் உறுதியாக நன்மை தரும். 花2

நன்மையே தருவது என்றாலும், நடுவுநிலைமை தவறுதலால் வருகின்ற வளத்தை, அப்போதே உள்ளத்திலிருந்து போக்கிவிட வேண்டும். 茄3 ஒருவர் தகுதியாளர், மற்றவர் தகுதியற்றவர் என்று உரைப்பது எல்லாம், அவரவரது எஞ்சி திற்கும் புகழும் பழியும் என்பவற்றால் காணப்படும். #4 பொருள் கேடும், பொருள் பெருக்கமும் வாழ்வில் இல்லாதன அல்ல; நெஞ்சத்தில் என்றும் நடுவுநிலைமை கோணாதிருப்பதே சான்றோர்க்கு அழகாகும். #15 தன் நெஞ்சமானது நடுவுநிலைமையிலிருந்து விலகி, தவறு செய்பவன், யான் இதனால் கெடுவேன்' என்பதனையும் அறிந்து கொள்வானாக! #6

நடுவுநிலைமையோடு நன்மையான செயல்களிலே நிலைத்திருப்

பவனின் தாழ்ச்சியையும் கேடு என்று உலகம் ஒருபோதும் கொள்ளாது. 孢Z

தன்னைச் சமனாகச் செய்துகொண்டு, பொருளைச் சீர்தூக்கிக் காட்டும் துலாக்கோல்போல அமைந்து,

ஒருபக்கம் சாயாதிருத்தல் சான்றோர்க்கு அழகாகும்.

  1. 8

உள்ளத்திலே கோணுதலற்ற பண்பை முடிவாகப் பெற்றிருந்தால், சொற்களில் கோணுதல் இல்லாதிருத்தலும் செப்பமாக உணரப் படும். 119 பிறர் பொருளையும் தமதேபோலக் கருதிக் கொண்டு ஒழுகுதல், வாணிகத்தைச் செய்வார்க்குரிய நல்ல வாணிக மரபாகும். 120