பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 19. புறங்கூறாமை

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது. 18|

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே புறனழிஇப் பொய்த்து நகை. #82

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூறும் ஆக்கம் தரும். 183

கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க முன்இன்று பின்நோக்காச் சொல். 184

அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்

புன்மையால் காணப் படும். (சொல்லும் 185

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் திறன்தெரிந்து கூறப் படும். 186

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர். 187

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் என்னைகொல் ஏதிலார் மாட்டு, 188

அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை. 189

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு j90