பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 21. தீவினை அச்சம்

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு 201

தீயவை தீய பயத்தலான் தீயவை தீயினும் அஞ்சப் படும். 202

அறிவினுள் எல்லாம் தலையென்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல். 203

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு. 204

இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் இலன்ஆகும் மற்றும் பெயர்த்து. 205

தீப்பால தான்பிறர்கட் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான். 206

எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென்று அடும். 207

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அடிஉறைந்து அற்று. 208

தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால். 209

அருங்கேடன் என்பது அறிக மருங்குஒடித் தீவினை செய்யான் எனின். 210