பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 24. புகழ்

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு.

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்குஒன்று

237

ஈவார்மேல் நிற்கும் புகழ், 232

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன்று இல், 233

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு. 234

நத்தம்போற் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க்கு அல்லால் அரிது. 235

தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று. 236

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

237

இகழ்வாரை நோவது எவன்.

வசையென்ப வையத்தார்க்கு எல்லாம் இசைஎன்னும் எச்சம் பெறாஅ விடின், 238

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா

யாக்கை பொறுத்த நிலம் 239

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய

வாழ்வாரே வாழா தவர். 240