பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் - துறவற இயல் 64

வாய்மை என்று சொல்லப்படுவது யாது என்றால், அது பிறருக்குத் தீமை இல்லாதபடி யாதொரு சொல்லையும் எப்போதும் சொல்லுதல் ஆகும். 29] குற்றமே இல்லாத நன்மையைத் தருவது என்றால், பொய்யான சொற்களும்கூட வாய்மையின் இடத்தில் வைத்துச் சிறப்பாகக் கருதத் தகுந்தவை ஆகும். 292 ஒருவன், தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைப் பற்றிப் பொய்த்துப் பேசாதிருப்பானாக; அப்படி பொய்த்தபின்னர், அவன் நெஞ்சமே அவனைச் சுடும். 293 உள்ளத்தால் பொய்யாது நடந்து வருவானாயின், அவன். உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் இருப்பவன் ஆகும் சிறந்த உயர்வைப் பெறுவான். 2.94 மனத்தோடு பொருந்திய வாய்மையையே ஒருவன் சொல்லி வருவானானால், அவன், தவத்தோடு தானமும் செய்பவரினும் மிகவும் சிறந்தவன் ஆவான். 295 பொய்யாமை போலப் புகழ் தருவது ஏதும் இல்லை; அதில் தளராமல் உறுதியாயிருப்பது ஒருவனுக்கு எல்லா அறத்தின் சிறப்பையும் தரும் 296 பொய்யாமை என்னும் அறத்தையே பொய்யாகாது தொடர்ந்து செய்துவந்தால், பிற அறச்செயல்கள் ஏதும் செய்யாத போதிலும்கூட, அது நன்மையைத் தரும். 297 புறவு லின் தூய்மை நீராலே ஏற்படும் உள்ளத்தின் தூய்மையானது, ஒருவன் வாய்திறந்து சொல்லும் அவனது வாய்மையாலே அடையப்படும். 298 புறவிருளைப் போக்கும் எல்லா விளக்கும் சிறந்த விளக்கு ஆகாது; சான்றோர்க்குப் பொய்யாமையாகிய விளக்கே அவற்றினும் சிறந்த விளக்காகத் தோன்றும். 299 யாம் மெய்ப்பொருளாக அறிந்தவற்றுள் எல்லாம், வாய்மையினும் எத்தன்மையாலும் சிறப்பான பொருள் இந்த உலகத்திலே வேறு எதுவும் இல்லை. 300