பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 32. இன்னா செய்யாமை

சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா செய்யாமை மாசற்றார் கோள். J莒

கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள். 312

செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமம் தரும். 313

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நான நன்னயம் செய்து விடல். 374

அறிவினால் ஆகுவது உண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை 315

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல். 316

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மானாசெய் யாமை தலை 317

தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க் கின்னா செயல். 3.18

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும், 319

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய் நோயின்மை வேண்டு பவர். (யார் 320