பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் - துறவற இயல் 72

நிலைத்து நில்லாத பொருள்களை எல்லாம் நிலையானவை என்று எண்ணி மயங்குகின்ற இழிவான அறிவுடைமை மிகவும் தாழ்ந்ததாகும். 33? பெரும்பொருள் வந்தடைதல் கூத்தாடுமிடத்திலே கூட்டம் வந்து கூடுவதைப் போன்றதாகும். அது போய்விடுவதும் அக்கூட்டம் கலைவதைப் போன்றதே. 332

நிலைத்து இராத தன்மையுடையது செல்வம் அதனை ஒருவன் அடைந்தால், அது நிலைப்பதற்கான அறமான செயல்களை அப்போதே செய்யவேண்டும். 333

வாழ்வை ஆராய்ந்து உண்மை உணர்பவரைப் பெற்றால், நாள் என்பது ஒரு கால அளவுபோலத் தன்னைக் காட்டி உயிரை அறுக்கும் வாள் என்பது விளங்கும். 334 நாக்கு உள்ளே இழுத்துக்கொண்டு விக்குள் மேலாக எழுந்து வருவதற்கு முன்பாகவே, நல்ல செயல்களை விரைவாகச் செய்ய வேண்டும். 335 நேற்று உள்ளவனாக இருந்த ஒருவன், இன்று இல்லை என்னும் நிலையாமையாகிய பெருமையை உடையதுதான் இந்த உலகம் ஆகும். 336 அடுத்த பொழுதில் உயிர் வாழும் வாழாது என்பதைத் தெரியாதவர்கள் நினைப்பது, கோடியும் அல்ல; அதன்மேலும் அளவற்ற பலவாகும். 337 தான் இருந்த கூட எனது தனித்துக் கிடக்கவும், பறவை பறந்து வெளியேறிப் போய்விட்டது போன்றதுதான் உடலோடு உயிருக்குள்ள தொடர்பு. 338 ஒருவன் செயலில்லாமல் தூங்குவதைப்போன்றது சாக்காடு; அவன் மீண்டும் உறக்கத்திலிருந்து விழித்துக் கொள்வது போல்வதே பிறப்பு. 339 உடலினுள் ஒரு மூலையிலே குடியிருந்த உயிருக்கு நிலையாக துழைந்து தங்கியிருப்பதற்குரிய தகுதிவாய்ந்த ஒர் இடம் அமையவில்லை போலும்! 340