பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

திருக்குறள் தமிழரின் தனிப்பெரும் செல்வம், இந்தச் செல்வம், பள்ளிப் பருவத்துச் சிறுவர் சிறுமியரிடமும் இருக்க வேண்டும்; இளைஞர் முதியோர் அனைவரிடமும், அனைவர் உள்ளத்திலும் நிலவ வேண்டும். இந்த ஆசையினால் உருவானதே இந்தப் புதிய உரை.

திருக்குறளுக்குப் பல உரைகள் உள்ளன. எல்லாரும் குறள் நெறியை உள்ளபடி அறிந்து பயன்பெற இந்தப் புதிய உரை உதவும்.

ஆசிரியர் புலியூர்க் கேசிகன் சாதாரணமாகத் தமிழ் அறிந்தவர். எல்லாருமே படித்து அறிவுவளமும் நல்வாழ்வும் பெறக் கூடிய வகையில் இந்த உரையமைப்பை தெளிவாக அமைத்துள்ளார்.

பூம்புகார் பதிப்பகத்தின் அன்புப் பரிசாக இதனைத் தமிழன்பர்களுக்கு அளிப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.

பதிப்பகத்தார்