பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ் மக்க ளிடையே திருக்குறள் பரவ வேண்டும் என்பதற்காக அல்லும்பகலும் அயராது எழுத்தாலும், பேச்சாலும் இயன்றவரை தொண்டு செய்து வருகிறேன் என்பதனைப் பணிவுடனும், பெருமையுடனும் சொல்லிக்கொள்ளுவதற்கு நான் தயங்கவில்லை. உரைநடை மூலம் திருக்குறள் முழுவதும் தெரிந்து கொள்ளுவதற்கு இந்த நூல் ஒரளவு நல்ல முறையில் துணையாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த நூலினைப் படித்து முடித்த பிறகு, குறட்பாக்களைப் படித்தால் எளிமையாக விளங்கும் என்பது ஒருதலை. இந்த நூலினை அருமையாக அச்சிட்டுக் கொடுத்த சென்னை மூவேந்தர் அச்சகத்தாருக்கு என்னுடைய நன்றி உரியதாகும். அன்புள்ள நூலாசிரியன்