பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ix


இளந்தென்றலாய் மிதந்துவரும் அவர் வார்த்தைகள்!

அடுக்கடுக்காய்ப் புரண்டுவரும் கடல் அலைகளைப் போல் வார்த்தைகளில் எதுகைகள்...! மோனைகள்...!

முத்துகளாய்க் கருத்துக் குவியல்கள்...!

விஞ்ஞான யுகத்தில் பாராமுகங்களாய் ஆகிக் கொண்டிருக்கும் செய்யுள்கள், இலக்கியங்கள் போன்றவை எல்லாம் இனிமேல் புதுக்கவிதைக்கார்களின் எழுத்துவீச்சாய்க் கருத்துச் சுழற்சிகளினால்தான் வீசப்பட வேண்டும்.

அந்த வீச்சாய் விழுந்ததுதான் ரா.சீ.யின் திருக்குறள் செய்திகள்!

இதில் இல்லாத பொருளில்லை; சொல்லாத செய்தியில்லை.

கடவுள், வான், அன்பு, விருந்து, மருந்து, ஈகை, புகழ், தவம், வாய்மை, கல்வி, காதல், நாணம், புணர்ச்சி, ஊடல் சொல்லிக் கொண்டே போகலாம்.

வள்ளுவன் கருத்துக்கெல்லாம் ரா.சீ யின் வார்த்தைகள் மெருகுபோட்டுள்ளன.

சாணை பிடிக்கப்பட்ட கத்திமுனைப் பதங்கள்!

யதார்த்த வாழ்வின் நடப்புக் கொடுகள்! அறுபது ஆண்டுகளாய்த் தமிழை வளைத்து வளைத்து. ‘இப்போதும்’ தானே வளைந்து கொடுக்கும் அற்புதச் சொற்கள்.!

அறன் வலியுறுத்தலின்விளக்கமாய், “அறத்தைக்கடைப்பிடி: ஆக்கம் உண்டாகும்; அதனைக் கைவிட்டால் வாழ்க்கையில் தேக்கமே ஏற்படும்; நன்மைகளின் நீக்கம் தொடரும்; கேடுகள் உன்னைத் தேடி வரும்” என்றும்;