பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/111

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
97

நேரிடையாகச் செய்திகளைத் திரட்டமாட்டார்கள். யாரைச் சந்தித்தால் செய்தி கிடைக்குமோ அவர்களைச் சந்தித்துப் பேசித் தெளிவு பெறுவார்கள்.

அரசன்கீழ் வேலை செய்பவர் யாராக இருந்தாலும் அவர்கள்மீதும் ஒரு கண் வைத்துக்கொண்டே இருக்க வேண்டும். மேலோட்டமாகப் பார்த்துவிட்டு அப்பாவிகள் என்று ஒருசிலரைக் கருதி முடிவு செய்துவிடக்கூடாது.

“திருப்பதிக்குப் போய்வருகிறான்; அதனால் தீமை செய்யமாட்டான்” என்று முடிவு செய்துவிடக் கூடாது. வேண்டியவர், வேண்டாதவர், செல்வாக்கு உடையவர் என்ற இவ் வேறுபாடுகள் குறுக்கே நிற்கக்கூடாது. மதம் மிக்க யானைபோல அஞ்சாமல் எங்கும் புகுந்து விளையாட வேண்டும்; இடத்துக்குத் தகுந்த வேடம் போட்டு மற்றவர்கள் சந்தேகப்படாதபடி பழகிச் செய்திகளைத் திரட்ட வேண்டும்; காவி உடை அணிந்தும் செல்ல நேரிடும்; அதற்கும் தயங்கக் கூடாது.

புதிய செய்திகள் மற்றவர்களுக்குத் தெரியாதவை; அவற்றைச் சேகரிக்க வேண்டும். தெரிந்த செய்திகளே யாயினும் அவற்றை உறுதி செய்துகொள்ள ஆதாரங்களைத் தேடவேண்டும்.

ஒரே ஒற்றன் கொண்டுவந்த செய்தியை ஆதாரமாகக் கொள்ளக்கூடாது; மற்றொருவன் அதே செய்தியைச் சொன்னால் அஃது உண்மை என்று கொள்ளலாம். மற்றும் ஒருவனைக் கொண்டு உறுதிசெய்க.

யாரையும் இந்தத் துறையில் நம்பமுடியாது. அரசன் தான் அமர்த்திய ஒற்றனையே மற்றொரு ஆள் கொண்டு அவன் போக்கினையும் நடத்தையினையும் ஆராய

7