பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/136

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
122

பொருளின் சேமிப்பு இருக்க வேண்டும்; உள்ளிருக்கும் வீரர்கள் வரப் போக வழிகள் தக்க வகையில் பெற்றிருக்க வேண்டும்.

எல்லாப் பொருளும் உடையதாக இருக்க வேண்டும். போர்க் காலங்களில் வீரர்களுக்கு உடன் இருந்து உதவ ஆள்களும் மிக்க அளவில் இருக்க வேண்டும்.

நாட்டு அமைச்சர்களும், காட்டிக் கொடுக்கும் கயவர்களும் எதிரிக்கு உளவுகள் சொல்லி அழிவுக்கு வழி தேடினாலும் தாக்குப் பிடிக்கக்கூடிய போக்குகளையும், தற்காப்பு இடங்களையும் உடையதாக இருக்க வேண்டும்; எதிரிகள் எளிதில் கைப்பற்றக் கூடாததாக இருக்க வேண்டும்.

பெரிய படை வந்து முற்றுகையிட்டாலும் உள்ளிருந்து சிறு படையைக்கொண்டே எதிர்த்துப் போரிட்டுத் தாக்கும் தகுதியை அரண் உண்டாக்கித் தரவேண்டும்.

வீரர்கள் தக்க இடத்தில் மறைந்திருந்து தாக்கும் பொறிவகைகளைப் பெற்று வீறுகொண்டு விளங்குவது சிறந்த அரண் ஆகும்.

எத்தகைய அமைப்புகள் நிரம்ப இருந்தாலும் போர் முனையில் மாட்சி உடைய வீரர்கள் இல்லை என்றால் அரண்கள் பயன்படா. வீரம் மிக்க போர்வீரர்கள் நாட்டின் அரண் எனவே மதிக்கப்படுவர்.

76. பொருள்செயல் வகை
(பொருள் ஈட்டும் திறம்)

காசுக்கு உதவாதவர்களையும் மதிக்கும்படி செய்வது பொருள் ஆகும். இல்லாதவனைக் கட்டிய மனைவியும்