பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/146

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
132


தவறுகள் காரணமாகப் பிரிந்து விடுபவர் ஏராளம்; தவறுகளை மன்னிப்பது ஒருவர் மனப்போக்கின் தாராளம், அத்தகைய மனப்போக்கு உடையர்வகளை உலகம் மதித்துப் போற்றும்.

82. தீ நட்பு
(தீய நட்பு)

ஒரே தட்டில் இருவரும் சோறு பகிர்ந்து உண்கிறார்கள்; நெருங்கிய நட்பு; அவன் அளவாக நிற்காமல் அத்து மீறுகிறான்; வங்கிக் கணக்கில் நண்பனுக்குத் தெரியாமல் கை வைக்கிறான்; பண்பு கெட்டால் அவனை விட்டு விலகுக: தீக்குச்சி உராயும்போதுதான் தெரிகிறது, அது நெருப்பை உண்டாக்குகிறது என்பது. பழகியவன் தான் எனினும் அழிவு கருதுபவனோடு இழையாதே.

காரியம் வரும்போது காலைப் பற்றுகிறான்; முடிந்த பின் அவன் தலை காட்டுவது இல்லை; கேட்டால் நேரம் இல்லை என்கிறான். அவனைக் கழித்துவிடுவதே தக்கதாகும்.

பயன் கருதிப் பழகும் நண்பன்; இவன் பொருளுக்காக முயங்க இடந்தரும் மங்கைக்கு நிகராவான்; கள்வனுக்கும் இவனுக்கும் வேறுபாடே இல்லை.

விழித்துக் கொண்டுதான் இருக்கிறாய்; அவன் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு இருப்பதனைச் சுருட்டுகிறான்; அத்தகைய தீயவனை விரட்டி அடித்துவிடு.

அறிவாளியின் நட்பு உனக்குக் கிடைக்கவில்லை. என் செய்வது? அதற்காக ஒரு முட்டாளின் தொடர்பையா